செயற்பாடு

 

-சாஸ்த்திரிய கலைகளை வளர்த்தல்.

 

-கலை நிறுவனங்களுடன் நல்லுறவை வளர்த்தல்.   

 

-மாணவர்களின் கலை சம்பந்தமான முன்னேற்றத்திற்கு வழி காட்டுதல்.

 

-நோர்வே நாட்டின் கலாசார அமைச்சில் பதிவு செய்தல்.

 

-இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நோர்வேயிலேயே பாடத்திட்டம்   அமைத்துத் தகுதி வாய்ந்த பரீட்சைகளை நடத்துதல்.

 

-பரீட்சைகள் வருடம் ஒருமுறை நடைபெறும்.

 

-கலைஞர்களைக் கெளரவித்தல்.

 

-இறுதியாண்டுப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு பட்டமளித்தல்.

 

-நோர்வே நுண்கலை மன்றம் எக்காரணம் கொண்டும் கலைக்கூடங்கள்        (பள்ளிக்கூடம்) எதையும் நடத்தமுடியாது.


-கலைமாணவர்கள் அங்கத்தவராதல் அவசியம்.

 

-நிர்வாகம் மற்றும் ஆலோசனைக்குழுவில் இடம் பெறுபவர்கள் அங்கத்தவராக       இருக்கவேண்டும்.

 

-16 வயதுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு மாத்திரம் வாக்குரிமை உண்டு.

 

-கலை ஆர்வலர்கள் அனைவரும் அங்கத்தவராகலாம்.

 

-அங்கத்தவர் கட்டணமாகக் குறைந்தபட்ச கட்டணமே வசூலிக்கப்படும்.
 (இது நோர்வே சட்டத்திற்கமைய இருக்கும்.)


-நோர்வே நுண்கலை மன்றத்தின் பெயரால் கலைத்தேவையின் காரணமாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்துக்காவோ கடன் எடுப்பதாயின் பொதுக்கூட்டத்தில் முடிவெடுத்தபின்பே நிர்வாகம் செயல்படுத்த முடியும்.


நோர்வே நுண்கலை மன்றத்தின் செயற்பாடுகள் அரசியல் சார்பற்றதாக அமையும்